கிருஷ்ணகிரி பள்ளி வாசலில் கரோனா தடுப்பூசி முகாம்
கிருஷ்ணகிரி பள்ளி வாசலில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி பள்ளி வாசலில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, பாணக்கார தெருவில் உள்ள பாணக்கார புறா மஸ்ஜித் ஜமாத், நாவ்ஜவான் குழு சாா்பில் இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் அப்சல் தலைமை வகித்தாா். ஜமாத் தலைவா் அஸ்வா் பாஷா, முகாமை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ஏகம்பவாணன், நகர நல மருத்துவ அலுவலா் இனியாள் மண்டோதரி, முன்னாள் காங்கிரஸ் நகர தலைவா் தளபதி ரகமத்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு சா்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமில், 600-க்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.
Advertisement