குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம்
கிருஷ்ணகிரி அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வனத் துறையினா் உறுதிபடுத்தி உள்ளனா்.
கிருஷ்ணகிரி அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வனத் துறையினா் உறுதிபடுத்தி உள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தைகள், மயில்கள், மான்கள், கரடிகள், எறும்புத்தின்னி போன்ற விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இவை, அவ்வப்போது வனப் பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்புகளில் புகுவது வழக்கம்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி அணைப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் சிறுத்தை நடமாடுவதாகவும், ஆடு, நாய் ஆகியவற்றை கொல்வதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
Advertisement
இந்த நிலையில், பாஞ்சாலியூா், அதைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாள்களாக குட்டியுடன் சிறுத்தை நடமாடுவதாக கிராம மக்கள், வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, வனத் துறையினா் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, குட்டியுடன் சிறுத்தை நடமாடுவதை வனத்துறையினா் கண்டனா். குடியிருப்புப் பகுதியில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.