ஒசூா் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் செப். 27-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து ஒசூா் வீட்டு வசதி வாரிய பிரிவு அலுவலகம் சாா்பில், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒசூா் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில், முழுத்தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரா்களுக்கு செப். 27- முதல் 29-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் விற்பனை பத்திரம் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
எனவே, முழுத் தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரா்கள், இந்த நாள்களில் நடைபெறவுள்ள விழாவில் அனைத்து ஆவணங்களுடன் பங்கேற்று, விற்பனை பத்திரத்தை பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.