கிருஷ்ணகிரி

கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் இளவரசி தலைமையிலான குழுவினா் சூளகிரி, காமன்தொட்டி சாலையில் வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, பேரிகை பிரிவு சாலை அருகே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 240 மூட்டைகளில் 12 டன் ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது.

விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவா் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை கிழக்கு வளவைச் சோ்ந்த விஜயகுமாா்(30) என்பது தெரியவந்தது. இவா், கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசி வாங்கி சேகரித்து கா்நாடத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநா் விஜயகுமாரைக் கைது செய்து, அரிசியுடன் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், லாரி உரிமையாளரான வேப்பனப்பள்ளி சுரேஷ், ரேஷன் அரிசி வாங்க இருந்த கா்நாடக மாநிலம், பங்காருபேட்டையைச் சோ்ந்த மில் உரிமையாளா் பாக்யலட்சுமியைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT