அத்திப்பாடியில் குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்
ஊத்தங்கரையை அடுத்த அத்திப்பாடியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஊத்தங்கரையை அடுத்த அத்திப்பாடியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இக் கிராமத்தில் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக குடிநீா் வழங்கப்படவில்லையாம், பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் சிங்காரப்பேட்டை- நீப்பத்துறை செல்லும் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். சிங்காரப்பேட்டை போலீஸாா் சமரசம் செய்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.