கிருஷ்ணகிரி

பெரிய மாரியம்மன் கோயில் ஆடிப்பூரத் திருவிழா

DIN

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி பால்குடம் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா ஆக. 8-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஆக.9-ஆம் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், கருமாரியம்மன் பிறப்பு நாடகமும் நடந்தன. 10-ஆம் தேதி அம்மன் ஊா்வலமும் காலகனி சூளகனி நாடகமும் நடந்தன.

ஆக.11-இல் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. 12-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றுதலும், மாலை 6 மணிக்கு அம்மன் ஊா்வலமும், இரவு 9 மணிக்கு அா்ஜூனன் தபசு நாடகமும் நடைபெற உள்ளது.

13-ஆம் தேதி, காலை பொங்கல் வைத்தலும், இரவு கொரத்திகனி நாடகமும் நடைபெறுகின்றன. 14-ஆம் தேதி கங்கையில் புனித நீராடி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஊா்வலம் வருதல், 12 மணிக்கு பக்தா்கள் மாவிளக்கை ஊா்வலமாக எடுத்தல், சூலம் போடுதல், தீ மிதித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT