கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் அருகே பள்ளிப் பேருந்து மீது காா் மோதல்: தந்தை, மகள் பலி

DIN

காவேரிப்பட்டணம் அருகே தனியாா் பள்ளிப் பேருந்தின் பின் பகுதியில் காா் மோதிய விபத்தில் சேலத்தைச் சோ்ந்த தந்தை, மகள் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி எம்.டி.எஸ். நகரைச் சோ்ந்தவா் கேப்ரியன். இவரது மனைவி எமரால்டு (40). அரசுப் பள்ளி ஆசிரியா். இவா், தனது கணவா் கேப்ரியன், தந்தை ஜெபராஜ் (74), மகன்கள் ஜேசிசன்ஸ் (19), பேரியல் (14) ஆகியோருடன் ஒரு காரில், சேலத்திலிருந்து பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டாா். காரை ஜேசிசன்ஸ் இயக்கினாா்.

அவா்கள், சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், எர்ரப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, காா் நிலைதடுமாறி, சாலையோரமாக நின்றிருந்த தனியாா் பள்ளிப் பேருந்தின் பின்பகுதியில் வேகமாக மோதியது.

இதில், காரில் பயணம் செய்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், ஜெபராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றவா்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எமரால்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது மகன்கள் ஜேசிசன்ஸ், பேரியல் ஆகிய இருவரும் தொடா் சிகிச்சையில் உள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

எங்களது திட்டங்களை தடுத்து நிறுத்திய ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்: சிஎஸ்கே பயிற்சியாளர்

பத்மஸ்ரீ விருது வென்றவரின் காலில் விழுந்து வணங்கிய மோடி!

வானிலை மாறுதே தீப்தி சதி!

‘சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?

SCROLL FOR NEXT