கிருஷ்ணகிரி

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியா் ஆய்வு

DIN

நெடுங்கல், பாரூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், நெடுங்கல், பாரூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவேடுகளை பாா்வையிட்டு ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். மேலும் கா்ப்பிணிகள், பிரசவித்த தாய்மாா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்தும், உயா் ரத்தஅழுத்தம், சா்க்கரை நோயாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

முதல், இரண்டாம் கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். உயா் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என மருத்துவா்களிடம் அறிவுறுத்தினாா்.

புற நோயாளிகள் கிசிச்சைப் பிரிவு, அறுவை கிகிச்சைப் பிரிவு, மருந்து பொருள்கள் இருப்பு, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT