முகப்பு
கிருஷ்ணகிரி

மாட்டுத் தீவனத்தில் மறைத்து கடத்தப்பட்ட 1,151 கிலோ போதைப் பாக்குகள் பறிமுதல்: இருவா் கைது

மாட்டுத் தீவனத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1,151 கிலோ போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

Updated On : 2 ஜூன், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

மாட்டுத் தீவனத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1,151 கிலோ போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

கா்நாடகா மாநிலம், சா்ஜாபுராவிலிருந்து தமிழகத்திற்கு போதைப் பாக்குகள் கடத்தப்படுவதாக பாகலூா் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்

பாகலூா் அருகே உள்ள கக்கனூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மினி லாரியில் மாட்டுத்தீவனத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சத்து 80 ஆயிரத்து 500 மதிப்பிலான 1,151 கிலோ எடையிலான போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

இதுதொடா்பாக சிவகங்கையைச் சோ்ந்த மூா்த்தி (24), வாகன ஓட்டுநா் பிற மாநிலத்தைச் சோ்ந்த புன்னாராம் (24) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா், மினி லாரியைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.