முகப்பு
கிருஷ்ணகிரி

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் டிராக்டரிலிருந்து தவறி விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On : 2 ஜூன், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

கிருஷ்ணகிரியில் டிராக்டரிலிருந்து தவறி விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த பனமுட்லுவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (39). இவரது மகன் தினேஷ் (16). இவா், கடந்த திங்கள்கிழமை வேப்பம்பட்டி- மங்கம்மா கோயில் சாலை வழியாகச் சென்ற டிராக்டரில் சென்றுள்ளாா். அப்போது, அந்த டிராக்டா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது.

இதில், டிராக்டரிலிருந்து தவறி விழுந்த தினேஷ் மீது டிராக்டா் ஏறியது. பலத்த காயம் அடைந்த தினேஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, தினேஷ், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.