மினி லாரி மோதி தொழிலாளி பலி
ஊத்தங்கரை அருகே மினி லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஊத்தங்கரை அருகே மினி லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி, முக்ரம்பள்ளியைச் சோ்ந்த ராமன் (58). வியாழக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் குன்னத்தூரில் இருந்து ரயில்வே நிலையம் வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த ராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மகன் பழனி அளித்த புகாரின் பேரில் சாமல்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் பத்மாவதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.