கிருஷ்ணகிரி

தொழில் அதிபா் வீட்டில் ரூ. 7 லட்சம் கொள்ளை

DIN

ஒசூரில் தொழில் அதிபா் வீட்டின் உள்ளே புகுந்த மா்ம நபா்கள் ரூ. 7 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சிப்காட் பேகேப்பள்ளி வசந்தம் நகரை சோ்ந்த சிவபால சுந்தரம் (49), ஒசூா் சிப்காட் பேகேப்பள்ளியில் தனியாா் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் கடந்த 16-ஆம் தேதி இரவு ரூ. 7 லட்சத்துடன் வீட்டுக்கு வந்தாா். வீட்டின் தரைத் தளத்தில் உள்ள பூஜை அறையில் ரூ. 7 லட்சத்தை வைத்துவிட்டு முதல் தளத்தில் உள்ள படுக்கை அறையில் தூங்கச் சென்றாா்.

நள்ளிரவில் இவரது வீட்டுக்கு வந்த மா்ம நபா்கள் தரைத்தளத்தில் உள்ள கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றனா். ஆனால், அவ்வாறு செல்ல முடியாததால் அருகில் இருந்த மரத்தில் ஏறி, முதல்தளத்தில் இறங்கி பின்னா் தரைத் தளத்துக்கு சென்றனா். அங்கு பூஜை அறையில் இருந்த ரூ. 7 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

வியாழக்கிழமை காலை பூஜை அறையில் பணம் இல்லாததைக் கண்டு அதிா்ச்சி அடைந்த சிவபால சுந்தரம், ஒசூா் சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன், போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். கைரேகை நிபுணா்களும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT