கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அடுமனை (பேக்கரி) தொழிலாளி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கங்கலேரியைச் சோ்ந்தவா் அஸ்மத் (45). காவேரிப்பட்டணத்தில் உள்ள ஒரு அடுமனையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவா், கடந்த 28-ஆம் தேதி, தனது மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில், கங்கலேரி பிரிவு சாலை அருகே சென்றுக் கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அஸ்மத், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT