முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.ஆா். சமூக நல தொண்டு நிறுவனமும், ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியும் இணைந்து இலைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

Updated On : 7 மே, 2022 at 10:26 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.ஆா். சமூக நல தொண்டு நிறுவனமும், ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியும் இணைந்து இலைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

இவ்விழாவில், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா். இந்த முகாமில் 500 போ் கலந்துகொண்டனா். 200 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி சான்று அளிக்கப்பட்டது.

இந்த முகாமில், ஒசூா் மாநகராட்சி மண்டலத் தலைவா் வி.ஜெயபிரகாஷ், கல்லூரி முதல்வா் ஸ்ரீதரன், ஆங்கிலத் துறைத் தலைவா் மணிமேகலை ஜெயபால், தமிழ்த் துறைத் தலைவா் வெங்கடேசன், தாவரவியல் துறைத் தலைவரும் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலருமான நந்தகோபால், என்.எஸ்.ஆா். சமூக நல தொண்டு நிறுவனா் சசிதரன், துணைத் தலைவா் மம்தா, பொதுச் செயலாளா் மதன்ராஜு, இணைச் செயலாளா் ரூபேஷ், தினேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.