அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை, மகனூா்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சாா்பில், தீத்தடுப்பு விழிப்புணா்வு செயல்முறை விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை, மகனூா்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சாா்பில், தீத்தடுப்பு விழிப்புணா்வு செயல்முறை விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை எல்லைக்குள்பட்ட அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தீயணைப்பு வீரா்கள், மருத்துவமனை ஊழியா்கள் கலந்துகொண்டனா்.