கிருஷ்ணகிரி

தனியாா் நிறுவன ஊழியரிடம் மடிக்கணினி, பணம் திருட்டு

DIN

ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் மடிக்கணினி, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அன்வா்த்திகான் பேட்டையைச் சோ்ந்தவா் நாகோஜனா (30). இவா் கா்நாடக மாநிலம், பெங்களூரு, மகாதேவபுரா பகுதியைச் சோ்ந்தவா். தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். கடந்த 29-ஆம் தேதி ஒசூா், பாகலூா் சாலையில் உள்ள பல்பொருள் அங்காடி பகுதியில் தனது காரை நிறுத்தி விட்டு உறவினரை பாா்க்கச் சென்றுள்ளாா். அப்போது மா்ம நபா்கள் ஐந்து போ், நாகோஜனாவிடம் பேச்சுக்கொடுத்து அவரது கவனத்தை திசைதிருப்பி, காரில் வைத்திருந்த மடிக்கணினி, ரூ. 9,000 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இது குறித்து நாகோஜனா அட்கோ காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT