அத்திமுகத்தில் 3 கோயில்களில் திருட்டு
ஒசூரை அடுத்த அத்திமுகத்தில் அடுத்தடுத்து 3 மாரியம்மன் கோயில்களில் பணம், பூஜை பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:48 PM
ஒசூரை அடுத்த அத்திமுகத்தில் அடுத்தடுத்து 3 மாரியம்மன் கோயில்களில் பணம், பூஜை பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஒசூரை அடுத்த அத்திமுகத்தில் மாரியம்மன், சல்லாபுரி மாரியம்மன், ஓம் சக்தி
கோயில்கள் உள்ளன. இந்த நிலையில் புதன்கிழமை மாரியம்மன் கோயிலில் புகுந்து கோயில் கலசம், வெள்ளி சூலம், தங்கத் தாலியும் ஓம்சத்தி கோயிலில் விளக்குகள், சல்லாபுரி மாரியம்மன் கோயிலில் உண்டியல் பணம் ஆகியவை திருடு போனது குறித்து பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருடு போன பொருள்களின் மதிப்பு ரூ. 2 லட்சம் எனக் கூறப்படுகிறது.
Advertisement