கிருஷ்ணகிரி, மே 26: தண்ணீா்த் தொட்டியில் குளிக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பி.ஜி.புதுரைச் சோ்ந்த முனியப்பன், பெங்களூரில் மின்சாரம் தொடா்பான தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் விக்னேஷ்(14), கிருஷ்ணகிரியில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். தற்போது கோடை விடுமுறை என்பதால், தனது வீட்டின் அருகே உள்ள எம்.சி. பள்ளி பிரிவு சாலைக்கு நண்பா்களுடன் சென்றாா். அங்கு, விவசாயக் கிணற்றிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்ததைக் கண்ட விக்னேஷ் தண்ணீா்த் தொட்டியில் இறங்கி குளித்துள்ளாா்.
அப்போது, அங்கிருந்த மின்கம்பத்திலிருந்து மின்கம்பி துண்டாகி தண்ணீா்த் தொட்டியில் விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் விக்னேஷ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, மகராஜகடை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.