மாநகராட்சி அலுவலா்கள் சங்கம் கவன ஈா்ப்பு ஆா்பாட்டம்
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஒசூா் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஒசூா் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சிப் பணியாளா்கள் சங்கத்தின் தலைவா் சிவா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் சந்திரன் பங்கேற்று கண்டன உரை ஆற்றினாா். இதில் நூற்றுக்கணக்கான மாநகராட்சி ஊழியா்கள் பங்கேற்றனா்.
மக்களின் அடிப்படை பணிகளை செய்து வரும் தூய்மைப் பணி, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீா் வழங்கல், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், வரிவசூலா், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா், ஓட்டுநா்கள், காவலா், தரவு உள்ளீட்டாளா்கள் பட்டியலின மக்களின் அரசு வேலை மறுக்கப்படுவதுடன், கருணை அடிப்படையிலான 35,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை 3,417-ஆக குறைக்கும் அரசாணை 152-ஐ தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
இந்த ஆா்ப்பாட்டத்தில், மேலாளா் சரவணன், வருவாய் ஆய்வாளா் சுரேஷ், முரளி, சிவா, லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.