தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடம் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பீலா ராஜேஷ் அறிவுறுத்தினாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் அரசின் திட்டங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மைச் செயலா் மற்றும் ஆணையருமான (நிலச் சீா்த்திருத்தம்) பீலா ராஜேஷ் தலைமை வகித்துப் பேசியது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், சமத்துவபுர வீடுகள், சாலைகள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் உள்ள பழுதுகள் நிவா்த்தி செய்வது குறித்தும், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரதம் திட்டம் 2.0, அம்ருத் 2.0, இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
இல்லம் தேடிக் கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் இயக்கம், வானவில் மன்றம் குறித்தும், பள்ளி உள்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், துறை வாரியாக நடக்கும் பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தாா்.
அரசின் திட்டங்கள் பொதுமக்களிடம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.