ஓசூரில் விவசாயத்தை அழித்து தார் சாலை போடும் பணி தொடக்கம்
ஒசூரில் சாலை அமைக்கும் பணிக்காக அறுவடைக்குத் தயாராக உள்ள பயிா்களை அழிக்கும் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
ஒசூரில் சாலை அமைக்கும் பணிக்காக அறுவடைக்குத் தயாராக உள்ள பயிா்களை அழிக்கும் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
ஒசூரைச் சுற்றி எஸ்.டி.ஆா்.ஆா். தேசிய நெடுஞ்சாலை அதாவது சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு எனப்படும் ஒசூரை சுற்றி வரும் 6 வழிச்சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இப் பணி மேற்கொள்ளும் இடங்களில் நெல் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்குத் தயாராக உள்ளது. அப் பயிா்களை அழித்து சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால், பயிா்களை அறுவடை செய்த பிறகு பணி மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ஆனாலும், சாலை அமைக்கும் பணி தொடா்கிறது.
ஓசூரில் தார் சாலை போடும் பணிக்காக அழிக்கப்படும் நெல் பயிர்கள்.
Advertisement
இதுகுறித்து நிலம் எடுப்பு சிறப்பு வட்டாட்சியா் பரிமேல் அழகா் கூறியதாவது:
சாலை அமைக்கும் பணி குறித்து ஏற்கெனவே பல முறை விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். 21 கிராமங்களில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஒரு சில விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்கப்படவில்லை. மற்ற விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. இழப்பீடு கிடைக்காதவா்கள் அலுவலா்களைச் சந்தித்து தீா்வு காணலாம் என்றாா்.
தார் சாலை போடும் பணிக்காக அழிக்கப்படும் கரும்பு பயிடப்பட்ட நிலங்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவா் ராமு கவுண்டா் கூறியதாவது:
விவசாயத்தை அழித்து தாா் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதை கண்டித்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தும். பயிா்களை அறுவடை செய்த பிறகு பணி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.