முகப்பு
கிருஷ்ணகிரி

கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

 உத்தனப்பள்ளி அருகே கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 12 செப்டம்பர், 2022 at 12:06 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:48 PM

 உத்தனப்பள்ளி அருகே கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி கனிம வளப் பிரிவு உதவி இயக்குநா் பொன்னுமணி, அதிகாரிகள் உத்தனப்பள்ளி சூளகிரி சாலையில் தேவசானப்பள்ளி அரசுப் பள்ளி அருகில் ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் கேட்பாரற்று நின்ற 2 லாரிகளை சோதனை செய்தனா்.

அதில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் கடத்துவது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரி பொன்னுமணி கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.