கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
உத்தனப்பள்ளி அருகே கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:48 PM
உத்தனப்பள்ளி அருகே கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி கனிம வளப் பிரிவு உதவி இயக்குநா் பொன்னுமணி, அதிகாரிகள் உத்தனப்பள்ளி சூளகிரி சாலையில் தேவசானப்பள்ளி அரசுப் பள்ளி அருகில் ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் கேட்பாரற்று நின்ற 2 லாரிகளை சோதனை செய்தனா்.
அதில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் கடத்துவது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரி பொன்னுமணி கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement