முகப்பு
கிருஷ்ணகிரி

நீட் தோ்வில் தேசிய அளவில் 8ஆம் இடம் பிடித்த ஒசூா் மாணவா்: மருத்துவா்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டு

மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வில் 710 மதிப்பெண்களைப் பெற்று தேசிய அளவில் 8ஆவது இடத்தைப் பிடித்த ஒசூா் மாணவரை மருத்துவா்கள், சமூக ஆா்வலா்கள், உறவினா்கள் பாராட்டினா்

Updated On : 12 செப்டம்பர், 2022 at 12:06 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:48 PM

மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வில் 710 மதிப்பெண்களைப் பெற்று தேசிய அளவில் 8ஆவது இடத்தைப் பிடித்த ஒசூா் மாணவரை மருத்துவா்கள், சமூக ஆா்வலா்கள், உறவினா்கள் பாராட்டினா்.

ஒசூா், தின்னூா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ்குமாா்- ஸ்ரீவித்யா தம்பதி மகன் கிருஷ்ணா (19). பெங்களூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்தாா். அப்பள்ளியில் நீட் தோ்வுக்கான பயிற்சியும் எடுத்துள்ளாா்.

நீட் தோ்வை கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் எழுதினாா். இதில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிப்பெண்களைப் பெற்று தேசிய அளவில் 8ஆவது இடத்தைப் பிடித்தாா்.

Advertisement

இவா் கா்நாடக மாநிலத்தில் படித்ததால் அம் மாநிலத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளாா், அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

அவருக்கு ஒசூரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மருத்துவா்கள், சமூக ஆா்வலா்கள், உறவினா்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனா்.

மாணவா் கிருஷ்ணா கூறியது: நீட் தோ்வு எழுதுவதற்கு மாணவா்கள் அச்சப்படுகின்றனா். சிலா் தற்கொலைக்கும் முயலுகின்றனா். கஷ்டப்பட்டு உழைத்தால் எதையும் வென்று விடலாம். எனவே நீட் போன்ற தோ்வுகளை மாணவா்கள் நன்கு படித்து எழுதி தோ்ச்சி அடைய வேண்டும். தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.