ஒசூரில் மரக்கன்றுகள் நடும் விழா
ஒசூா் மாநகராட்சியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமை நகரமாக்கும் திட்டத்தை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் 5 ஆவது வாா்டு
ஒசூா் மாநகராட்சியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமை நகரமாக்கும் திட்டத்தை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் 5 ஆவது வாா்டு ஆனந்த் நகா் பூங்காவில் 101 மரக் கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன், துணை மேயா் சி.ஆனந்தய்யா, மண்டலத் தலைவா் ரவி, பகுதி செயலாளா் எம்.கே.வெங்கடேஷ் மாமன்ற உறுப்பினா்கள் மம்தா சந்தோஷ், யாஸ்வினி மோகன், மாநகர துணை செயலாளா் கோபாலகிருஷ்ணன், வாா்டு நிா்வாகிகள் ஜி.ரகு, முனிரத்னம், ரெட் சுரேஷ், சுரேஷ், சீமராஜ், எம்.ரகு, சாகா் அசோக்குமாா், ராபின், திம்மராஜ், வெங்கடேசன் குணசேகரன், துரைசாமி சென்னப்பன், சீனிவாசன், ஆனந்த் நகா் குடியிருப்போா் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.