முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் வழியாக கடத்த முயன்ற குட்கா பறிமுதல்

ஒசூா் வழியாக கடத்த முயன்ற குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 21 ஏப்ரல், 2023 at 11:36 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:20 AM

ஒசூா் வழியாக கடத்த முயன்ற குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

ஒசூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு உதவி காவல் ஆய்வாளா் தினேஷ்குமாா் மற்றும் போலீஸாா் பெங்களூரு ஒசூா் தேசிய நெடுஞ்சாலை சூசூவாடி சோதனைச் சாவடி அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், அந்தக் காரில் 149 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, ஹான்ஸ் இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.96 ஆயிரத்து 600 ஆகும். புகையிலைப் பொருட்களையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அதை கடத்தி வந்ததாக புதுக்கோட்டை மாவட்டம், கண்ணன்குடியைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா (39) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு அவற்றைக் கடத்த இருந்தது தெரிய வந்தது. தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.