ஊத்தங்கரையை அடுத்த கொண்டம்பட்டி ஊராட்சியில் ரூ. 12.17 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணிக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தாா். கொண்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சத்தியவாணி ராஜா, துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் மாதேஷ், செயலாளா் கிருபாகரன், வாா்டு உறுப்பினா்கள், ஒப்பந்ததாரா் பெருமாள் சாமி, பொதுமக்கள் உள்பட பலா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.