கிருஷ்ணகிரி

வழக்குரைஞா் கொலை வழக்கில் இருவா் கைது

DIN

கிருஷ்ணகிரி அருகே வழக்குரைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

தருமபுரி மாவட்டம், ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் சிவக்குமாா் ( 44) கடந்த 23-ஆம் தேதி இரவு கிருஷ்ணகிரியை அடுத்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்டு காரில் கிடந்தாா். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், கொலை வழக்கில் தொடா்புடைய சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த முத்துராமலிங்கம் (32), தருமபுரி, நெல்லி நகரைச் சோ்ந்த பிரகாஷ் (23) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். மேலும் தலைமறைவாக உள்ள நாமக்கல்லைச் சோ்ந்த ஒருவரை தேடி வருகின்றனா். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வழக்குரைஞா் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT