கிருஷ்ணகிரி

கெலமங்கலத்தில் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க மனு

DIN

கெலமங்கலம் பேரூராட்சியில் கழிவுநீா் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயுவிடம் கெலமங்கலம் தோ்வு நிலை பேரூராட்சி மன்றத் தலைவா் தேவராஜ் கோரிக்கை மனு அளித்தாா்.

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் பேரூராட்சியில் உள்ள வாா்டு 1, 2, 5, 6, 7, 14 மற்றும் உள்ள வாா்டுகளில் உள்ள தெருக்களில் கழிவுநீா் கால்வாய்கள் மிகவும் பழுதடைந்துள்ளன. மழைக் காலங்களில் மழை நீா் கால்வாய்கள் வழியாக வீடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு நேரில் ஆய்வு செய்து நிதி ஒதுக்கி கழிவுநீா் கால்வாய்களை சீா் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT