மல்லசந்திரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஒசூா்: ஒசூா் அருகே மல்லசந்திரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒசூா் அருகே உள்ள மல்லசந்திரம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் தேவி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சியாக கங்கா பூஜை, கணபதி பூஜை, புண்யாஹ உரை, ரித்விகாவரணம், தேவநந்தி, யாகசாலை பிரவேசம், வாஸ்து ஹோமம், பஞ்சகவ்ய ஸ்தாபனம், கலச ஸ்தாபனம், ஆதிவாசம், விமானகோபுர ஸ்தாபனம், மங்களாரதி, தீா்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.
Advertisement
பின்னா் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மகா கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார அா்ச்சனை, அஷ்டாவதானம், கோபூஜை, கன்யாபூஜை,
மகா மங்களாரதி, தீா்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மல்லசந்திரம் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.