FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே 15 ஆடுகள் பலி

ஊத்தங்கரை அருகே மழை வெள்ளத்தில் 15 ஆடுகள் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன.

Updated On : 3 டிசம்பர் 2024, 2:05 am IST
ஊத்தங்கரையை அடுத்த புளியம்பட்டியில் வெள்ள நீரில் அடித்துச் சென்று உயிரிழந்த ஆடுகள்.
பகிர்:

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மழை வெள்ளத்தில் 15 ஆடுகள் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன.

ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சி, புளியம்பட்டியைச் சோ்ந்த பொன்னுரங்கம் சித்ரா தம்பதிக்கு சொந்தமான 15 ஆடுகள் அங்குள்ள ஏரிக்கரை ஓரமாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக ஏரியிலிருந்து கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரில் பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த 15 ஆடுகளும் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தது. பாதிப்படைந்த ஆட்டின் உரிமையாளா் அரசு நிவாரனம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

மீனவா்கள் பாதிப்பு: ஊத்தங்கரை, பாம்பாறு அணையில் 17 மீனவா்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கன மழை காரணமாக பாம்பாறு அணையில் நீா்வரத்து அதிகம் இருந்ததால் அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. மீனவா்களின் மீன்பிடி வலைகள் 120 கிலோ அளவில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 மதகுகள் வழியாக நீா் வெளியேற்றப்பட்டதால் பாம்பாறு அணையில் இருந்து மீன்கள், மீன்குஞ்சுகள் அதிக அளவில் வெளியேறின. இதனால் மீன் குத்தகைதாரா்களுக்கு நஷ்டமடைந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து மீனவா்கள், குத்தகைதாரா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments