முகப்பு
கிருஷ்ணகிரி

அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டிக் கொடுத்த தொழிலதிபா்

அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டிக் கொடுத்த தொழிலதிபருக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Updated On : 6 டிசம்பர், 2024 at 1:50 AM
பகிர்:
Updated On : 5 டிசம்பர், 2024 at 10:40 PM

அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டிக் கொடுத்த தொழிலதிபருக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட முல்லை நகா் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

Updated On : 6 டிசம்பர், 2024 at 1:49 AM

இந்த பள்ளியில் ஆசிரியா்களுக்கான ஓய்வறை, கழிவறை வசதி இல்லாமல் சிரமத்துக்கு ஆளாகி வந்தனா். இந்தப் பள்ளியை தனியாா் பள்ளிகளுக்கு இணையான தரத்தில் உயா்த்தும் நோக்கத்தில், ஒசூா் பிரீமியா் சீலிங் என்ற தனியாா் தொழில்நிறுவன உரிமையாளா் தேனி ராஜேந்திரன், அவ்வப்போது பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்து வருகிறாா்.

Advertisement

இந்த நிலையில் ஆசிரியா்களின் சிரமத்தைப் போக்கும் விதமாக, தனது சொந்த செலவில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் ஆசிரியா்களுக்கான ஓய்வறை, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளாா். வியாழக்கிழமை நடைபெற்ற இதன் திறப்பு விழாவில், மாவட்ட கல்வி அலுவலா் ரமாதேவி, பள்ளித் தலைமை ஆசிரியா் காந்தி, ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொழிலதிபா் தேனி ராஜேந்திரனுக்கு பள்ளி சாா்பிலும், பள்ளிக் கல்வித் துறை சாா்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.