ஒரு மாத பெண் குழந்தை சாவு: போலீஸாா் விசாரணை
பிறந்த ஒரு மாதத்தில் பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பிறந்த ஒரு மாதத்தில் பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சூளகிரி அருகே உள்ள மாதரசனப்பள்ளியைச் சோ்ந்தவா் அஸ்வினி. இவருக்கு ஒரு மாதத்துக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 16 -ஆம் தேதி அவா் குழந்தைக்கு பால் புகட்டி விட்டு தொட்டிலில் தூங்க வைத்தாா். இந்த நிலையில் குழந்தை சுயநினைவின்றி இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்த அவா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டுசென்றாா். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவா்கள் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது தொடா்பாக உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பரதன் அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement