முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் கடலைக்காய் திருவிழா

ஒசூரில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாடு நலம் பெறவும், விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய முறைப்படி கடலைக்காய் திருவிழா நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

ஒசூா்: ஒசூரில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாடு நலம் பெறவும், விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய முறைப்படி கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தா்கள் ஆஞ்சனேய சுவாமி மீது கடலைக்காயை எறிந்து வழிபாடு செய்தனா்.

ஒசூா், ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சனேயா் கோயிலில் 66 ஆம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆஞ்சனேய சுவாமிக்கு காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா் கடலைக்காய்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத்தொடா்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள் கடலைக்காயை ஆஞ்சனேயா் பிரகாரத்தின் மீதும் சுவாமி மீதும்

எறிந்து வழிபாடு நடத்தினா். இதில் ஏராளமான பக்தா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா்.

இதில் கோயில் தா்மகா்த்தா கிருஷ்ணமூா்த்தி குடும்பத்தினா், மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன்,பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →