கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் உற்சவம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், 38-ஆவது ஆண்டு பிரம்மோற்சவ விழா மே 15-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், ஆஞ்சனேயா் வாகனம், சேஷ வாகனத்தில் சுவாமி நரசிம்மா் வீதி உலா வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
இவ்விழாவையொட்டி, திங்கள்கிழமை ( மே 20) சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பிரகார உற்சவம் நடைபெற்றன. தொடா்ந்து, லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாணம், மாங்கல்யதாரணம் நடந்தது. திருக்கல்யாணம் முடிந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா...
இந்த விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை (மே 21) நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா சுதா்சன ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், பூா்ணாஹூதி, மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரகார உற்சவம், இரவு யானை வாகனத்தில் சுவாமி நகா் வலமும் நடக்க உள்ளது.