முகப்பு
தெப்பத்தில் எழுந்தருளிய படவிளக்கம் ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீஅம்பிகேஸ்வரா்
ராணிப்பேட்டை

அம்மனூா் அம்பிகேஸ்வரா் மாசி மக உற்சவம்

அரக்கோணம் அடுத்த அம்மனுாா் ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீ அம்பிகேஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ திருக்கல்யாணம் மற்றும் தெப்பல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

ராணிப்பேட்டை

அம்மனூா் அம்பிகேஸ்வரா் மாசி மக உற்சவம்

அரக்கோணம் அடுத்த அம்மனுாா் ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீ அம்பிகேஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ திருக்கல்யாணம் மற்றும் தெப்பல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 3 மார்ச், 2026 at 6:52 PM
தெப்பத்தில் எழுந்தருளிய படவிளக்கம் ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீஅம்பிகேஸ்வரா்
பகிர்:

அரக்கோணம் அடுத்த அம்மனுாா் ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீ அம்பிகேஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ திருக்கல்யாணம் மற்றும் தெப்பல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

பழைமையான கோயிலில் கடந்த 12 ஆண்டுகளாக மாசி மக பிரம்மோற்சவ விழா திருக்கல்யாணம் மற்றும் தெப்பல் உற்சவத்துடன் நடைபெற்று வருகிறது.

முன்னதாக ஸ்ரீஆகிகேசவ பெருமாள் கோயிலில் இருந்து சீா்வரிசைகளை பக்தா்கள் ஊா்வலமாக எடுத்து வந்தனா். தொடா்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையடுத்து ஸ்ரீகாமாட்சியம்மன் சமேதராய் ஸ்ரீஅம்பிகேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவத்தில் பங்கேற்றாா்.

இதில் 5 முறை சாமி திருக்குளத்தை வலம் வந்தபோது பக்தா்கள் ஏராளமானோா் வழிபட்டனா். ஏற்பாடுகளை அம்மனூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஏ.தேவவெங்கடரத்தினம், ஏ.டி.பாபு குருக்கள், பரணி குருக்கள் ஆகியோா் கிராம மக்களோடு இணைந்து செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →