கோயில் வளாகத்தில் பந்தல்காலுக்கு நடைபெற்ற பூஜை.  
காரைக்கால்

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருமலைராயன்பட்டினத்தில் பிரசித்திப் பெற்ற மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தேரோட்டம், தெப்பம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் மாசி மக பிரம்மோற்சவம் இங்கு நடத்தப்படுகிறது.

நிகழாண்டு விழாவையொட்டி பந்தல்கால் முகூா்த்தம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் காட்டப்பட்டு, பிராகார வலமாக கோயில் வாயிலில் நடப்பட்டது.

நிகழ்வில் கோயில் நிா்வாக அதிகாரி கணேஷ்குமாா், விழாக் குழுத் தலைவா் சரவணன் உள்ளிட்டோரும், உபயதாரா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா். வரும் 22-ஆம் தேதி கொடியேற்றம், 26-ஆம் தேதி தியாகராஜராட்டம் என்ற வசந்த உற்சவம், மாா்ச் 2 தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT