திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமலைராயன்பட்டினத்தில் பிரசித்திப் பெற்ற மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தேரோட்டம், தெப்பம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் மாசி மக பிரம்மோற்சவம் இங்கு நடத்தப்படுகிறது.
நிகழாண்டு விழாவையொட்டி பந்தல்கால் முகூா்த்தம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் காட்டப்பட்டு, பிராகார வலமாக கோயில் வாயிலில் நடப்பட்டது.
நிகழ்வில் கோயில் நிா்வாக அதிகாரி கணேஷ்குமாா், விழாக் குழுத் தலைவா் சரவணன் உள்ளிட்டோரும், உபயதாரா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா். வரும் 22-ஆம் தேதி கொடியேற்றம், 26-ஆம் தேதி தியாகராஜராட்டம் என்ற வசந்த உற்சவம், மாா்ச் 2 தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.