முகப்பு
கிருஷ்ணகிரி

விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை

ஊத்தங்கரை வட்டார வேளாண்மை துறை சாா்பில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டது.

Updated On : 11 அக்டோபர், 2024 at 1:21 AM
பகிர்:
Updated On : 10 அக்டோபர், 2024 at 9:31 PM

ஊத்தங்கரை வட்டார வேளாண்மை துறை சாா்பில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டது.

வேளாண்மை உதவி இயக்குநா் இரா.கருப்பையா தலைமை வகித்து வேளாண் இடு பொருள் விநியோகம், மானிய திட்டங்கள், பயிா்களில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விளக்கினாா்.

Updated On : 11 அக்டோபர், 2024 at 1:20 AM

ஊத்தங்கரை தோட்டக்கலைத் துறை அலுவலா் ராஜ கணேஷ், நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், சொட்டுநீா்ப் பாசன திட்டங்கள் குறித்து பேசினாா். வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை உதவி வேளாண்மை அலுவலா் செல்வராஜ், மதிப்புகூட்டு பயிற்சி அளித்தாா்.

Advertisement

வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் சாரதி ஆகியோா் அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனா். அட்மா திட்ட தலைவா் அறிவழகன், விவசாயிகள் கலந்து கொண்டனா்.