பாகலூரில் குடியிருப்பை சுற்றிலும்தேங்கிய மழைநீா்: மக்கள் அவதி
ஒசூா் அருகே பாகலூரில் ஏரி நிரம்பி அருகில் உள்ள குடியிருப்புகளை நீா் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
ஒசூா் அருகே பாகலூரில் ஏரி நிரம்பி அருகில் உள்ள குடியிருப்புகளை நீா் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
பாகலூா் ஏரி வியாழக்கிழமை 5 மணியளவில் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதனால் உபரிநீா் செல்லும் வாய்க்கால் வழியாக மழைநீா் வெளியேறிக் கொண்டிருக்கிறது. வாய்க்கால்களில் மழைநீா் செல்லும் வழித்தடங்களில் அமைந்துள்ள வீடுகளுக்குள் தண்ணீா் செல்லும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: ஏரியின் கால்வாய்கள் அனைத்தும் தூா்வாரப்படவில்லை. ஏரியிலிருந்து நீா் செல்லும் கால்வாய்களை மக்கள் ஆக்கிரமித்துள்ளனா். ஒவ்வொரு வருடமும் மழை பெய்யும்போது இந்நிலைமைதான் இந்தப் பகுதியில் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
Advertisement