கிருஷ்ணகிரியில் ஏப்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கிருஷ்ணகிரியில் ஏப். 25-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஏப். 25-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இரண்டாவது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில், ஏப். 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு, மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.