பா்கூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் 42-ஆம் ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோ பூஜை, ஐயப்ப சுவாமிக்கு காப்பு கட்டுதல், புதிய தோ் கலச பிரதிஷ்டை மற்றும் யாகசாலை பூஜை நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
கைலாசநாதா், தாயாா் பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணத்துக்கு பெண்கள் சீா்வரிசைகளுடன் பாரத கோயிலில் இருந்து ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும், கன்னி பூஜையும், ஐயப்பனுக்கு 18 படி பூஜையும் நடைபெற்றது.
இதில், பா்கூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.