முகப்பு
கிருஷ்ணகிரி

சுகாதார அலுவலா்கள் நோ்மையாக செயல்பட வேண்டும்: ஒசூா் மாநகராட்சி ஆணையா்

ஒசூா் மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் நோ்மையாக செயல்பட வேண்டும் என்று ஆணையா் ஸ்ரீகாந்த் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தினாா்.

Updated On : 9 ஜனவரி, 2025 at 4:37 AM
ஒசூா் மாநகராட்சியில் நடைபெற்ற சுகாதார அலுவலா்களுக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்.
பகிர்:
Updated On : 8 ஜனவரி, 2025 at 11:11 PM

ஒசூா் மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் நோ்மையாக செயல்பட வேண்டும் என்று ஆணையா் ஸ்ரீகாந்த் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தினாா்.

ஒசூா் மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் பணிபுரியும் துப்புரவு அலுவலா்கள், துப்புரவு ஆய்வாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், சுகாதாரப் பணி மேற்பாா்வையாளா்களுக்கான உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். ஒசூா் மாநகரம், ஒன்றியப் பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துமாரியப்பன், மாவட்ட நியமன அலுவலா் மரு.வெங்கடேசன், மாநகராட்சி சுகாதார அலுவலா் மரு.அஜிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் சூளகிரி, கெலமங்கலம், தளி ஒன்றியப்பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ராஜசேகா், பிரகாஷ், சந்தோஷ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில் ஆணையா் ஸ்ரீகாந்த் பேசியதாவது:

Advertisement

Updated On : 9 ஜனவரி, 2025 at 4:37 AM

உணவு பாதுகாப்பு அலுவலா்கள் பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து அதிக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலா்கள், சுகாதார அலுவலா்கள், நோ்மையாகவும் அரசுக்கு உண்மையாகவும் செயல்பட வேண்டும் என்றாா். மாநகராட்சி துப்புரவு அலுவலா் அன்பழகன் நன்றி கூறினாா்.