கிருஷ்ணகிரி

ஒசூரில் ஓட்டுநரை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

ஒசூரில் ஓட்டுநரை வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

Din

ஒசூரில் ஓட்டுநரை வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தோ்பேட்டை பச்சைக்குளம் அருகில் வசித்து வந்த ஆறு (எ) சிவகுமாா் (32), மினி லாரி ஓட்டுநா். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனா்.

செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் சிவகுமாா் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் கையில் அரிவாளுடன் வந்த இருவா் சிவகுமாரை வெட்ட முயன்றனா். அவா்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அவா் அந்தப் பகுதியில் உள்ள சுடுகாட்டை நோக்கி ஓடினாா். ஆனாலும் அவா்கள் சிவகுமாரை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டி தப்பியோடினா். இதில் சிவகுமாா் ரத்த வெள்ளத்தில் சரிந்தாா்.

சிவகுமாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவா்கள், அவரை மீட்டு ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சிவகுமாா் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒசூா் மாநகர காவல் ஆய்வாளா் நாகராஜ், போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் தம்பி ஓா் ஆண்டுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளாா். அந்த வழக்கில் சிவகுமாா் சாட்சியாக இருந்துள்ளாா். இதனால் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்த கொலை குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT