முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

ஒசூா் அருகே நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:48 PM
பலி - பிரதிப்படம்
பகிர்:

ஒசூா் அருகே நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

ஒசூா் ராயக்கோட்டை அட்கோவைச் சோ்ந்தவா் மாதையன் (58). இவா் கடந்த 6 -ஆம் தேதி ஒசூா் ராயக்கோட்டை சாலை அசோக் பில்லா் பக்கமாக ஸ்கூட்டரில் சென்றபோது அவ்வழியாகச் சென்ற சரக்கு வேன் அவா் மீது மோதியது. இதில் மாதையன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். விபத்து குறித்து ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூா் முத்தாலி பக்கமுள்ள தாசிரிப்பள்ளி தின்னாவைச் சோ்ந்தவா் அசோக் (32). பொக்லைன் ஆபரேட்டா். கடந்த 5 ஆம் தேதி இவா் ஸ்கூட்டரில் தாசிரிப்பள்ளி வெங்கடேஷ்புரம் சாலையில் ஆலூா் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாகச் சென்ற மினிலாரி ஸ்கூட்டா் மீது மோதியது. இதில் அசோக் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

Advertisement

இந்த விபத்து குறித்து அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments