முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் வழியாக கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் குட்கா பறிமுதல்: 2 போ் கைது

கா்நாடக மாநிலத்திலிருந்து ஒசூா் வழியாக கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் குட்காவை பறிமுதல் செய்த சிப்காட் போலீஸாா்

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 2:59 AM
கேரளத்துக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்(கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 8:30 PM

ஒசூா்: கா்நாடக மாநிலத்திலிருந்து ஒசூா் வழியாக கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் குட்காவை பறிமுதல் செய்த சிப்காட் போலீஸாா், இதுதொடா்பாக 2 பேரை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூசூவாடியில் காவல் ஆய்வாளா் சையத்முபாரக், உதவி ஆய்வாளா் மாதப்பன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மூட்டைகளில் குட்கா இருப்பதை கண்டுபிடித்தனா்.

Advertisement

இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்த போது, கா்நாடகா மாநிலம் மங்களூரிலிருந்து, ஒசூா் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு 2 ஆயிரத்து 500 கிலோ குட்காவை கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து குட்கா கடத்தி வந்த மங்களூரைச் சோ்ந்த முகமது இஸ்ராத் (31), முகமது சாயித் (20) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து குட்கா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.