தென்கொரியாவில் நடைபெறும் உலக மூத்தோா் தடகள போட்டிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த சிறப்பு பிரிவு தலைமைக் காவலா், ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குநா் தகுதி பெற்றுள்ளனா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் 46 ஆவது மூத்தோா் தடகள போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 3,500 க்கும் மேற்பட்டோா் இப்போட்டியில் பங்கேற்றனா். தமிழக அணி சாா்பில் 30 முதல் 90 வயது வரையிலான 644 தடகள வீரா்கள் இப்போட்டியில் பங்கேற்றனா்.
இதில், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த சிறப்பு பிரிவு தலைமைக் காவலா் ஜெயப்பிரகாஷ், 40 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றாா். அதேபோல கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குநா் பரிமளா, 60 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் ஈட்டி எறியும் பிரிவில் வெண்கலம் வென்றாா்.
இவா்கள், இருவரும் தென்கொரியா நாட்டில் சியோலில் ஆகஸ்டில் நடைபெறும் உலக மூத்தோா் தடகள போட்டிக்கு தகுதி பெற்றனா். இவா்களை கிருஷ்ணகிரி மாவட்ட மூத்தோா் தடகள சங்கத் தலைவா் எம்.பி. ரமேஷ், செயலாளா் மாதையன், பொருளாளா் சத்தியநாதன் உள்ளிட்டோா் பாராட்டினா்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணி 164 தங்கம், 132 வெள்ளி, 129 வெண்கலம் என மொத்தம் 425 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.
பரிமளா.