சூளகிரி அருகே ரூ. 2.76 கோடியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, சாலைப் பணிகளை பூமிபூஜை செய்து எம்எல்ஏ ஒய். பிரகாஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
சூளகிரியை அடுத்த மாதா்சனப்பள்ளி, எம்.தொட்டி, தியாகரசனப்பள்ளி, சிகரலப்பள்ளி ஆகிய கிராமங்களில் ரூ. 2 கோடியே 76 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டா்கள் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்க தொட்டி, கான்கிரீட் சாலை, கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட பணிகளை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்.
முன்னதாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் எம்எல்ஏ பிரகாஷுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ முருகன், இளைஞரணி மாநில துணை செயலாளா் சீனிவாசன், சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளா் பாக்கியராஜ், வடக்கு ஒன்றிய செயலாளா் நாகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனிசந்திரன், முருகேசன், என்பிஆா். ராமச்சந்திரன், மல்லேஷ், சாதனஹள்ளி, ரவி, ராமன், குமாா், சீதாராமன், சீனிவாசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
படவரி...
தியாகரசனப்பள்ளியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா் ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.