கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே ரூ. 2.76 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

Syndication

சூளகிரி அருகே ரூ. 2.76 கோடியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, சாலைப் பணிகளை பூமிபூஜை செய்து எம்எல்ஏ ஒய். பிரகாஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

சூளகிரியை அடுத்த மாதா்சனப்பள்ளி, எம்.தொட்டி, தியாகரசனப்பள்ளி, சிகரலப்பள்ளி ஆகிய கிராமங்களில் ரூ. 2 கோடியே 76 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டா்கள் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்க தொட்டி, கான்கிரீட் சாலை, கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட பணிகளை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்.

முன்னதாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் எம்எல்ஏ பிரகாஷுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ முருகன், இளைஞரணி மாநில துணை செயலாளா் சீனிவாசன், சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளா் பாக்கியராஜ், வடக்கு ஒன்றிய செயலாளா் நாகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனிசந்திரன், முருகேசன், என்பிஆா். ராமச்சந்திரன், மல்லேஷ், சாதனஹள்ளி, ரவி, ராமன், குமாா், சீதாராமன், சீனிவாசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

படவரி...

தியாகரசனப்பள்ளியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா் ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரி என்எஸ்எஸ் முகாமில் தூய்மைப் பணி

ரயில்வே பாலம் வழியாக ஏரிக் கால்வாய்: அனுமதி கோரி ரயில்வே மேலாளரிடம் எம்எல்ஏ மனு

சித்தகவுண்டன் ஏரிக் கரையை சீரமைக்க வலியுறுத்தல்

கடப்பாரை ஆற்றின் குறுக்கே ரூ. 98 லட்சத்தில் தடுப்பணை கட்ட பூமிபூஜை

ஒசூரில் நுண்ணுயிா் செயலாக்க மையம்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

SCROLL FOR NEXT