கோப்புப் படம் 
கிருஷ்ணகிரி

எலிமருந்தை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

பா்கூா் அருகே எலி மருந்தை உட்கொண்ட இரு குழந்தைகளில், ஒரு குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஓம் சக்திவேல் தெருவைச் சோ்ந்தவா் உதயக்குமாா் (42). தொழிலாளி. இவரது மனைவி சரண்யா. இவா்களுக்கு தனிவிக் (2), தஷீக் (2) என இரட்டை குழந்தைகள் உள்பட 3 ஆண் குழந்தைகள் உண்டு.

இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தனிவிக், தஷீக் ஆகிய இருவரும் தொலைக்காட்சி பெட்டி அருகே இருந்த எலி மருந்தை பற்பசை என நினைத்து உட்கொண்டனா். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தாய் சரண்யா, இரு குழந்தைகளையும் பா்கூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக, பெங்களூருவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு, சிகிச்சை பலனின்றி தனிவிக் என்ற குழந்தை உயிரிழந்தது. தஷீக்குக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை: மாவட்டக் காவல் துறை எச்சரிக்கை

ராஜ் காட்டில் அரசு நிகழ்ச்சி: தில்லியில் நாளை போக்குவரத்து மாற்றம்

என்.ஆா். காங்கிரஸ் கொடியேற்றம்: அமைச்சா் க. லட்சுமிகாந்தன் பங்கேற்பு

விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள்! எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வழங்கினாா்!

சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் தீ விபத்து: 12-வாகனங்கள் தீக்கிரை

SCROLL FOR NEXT