மாற்றுத்திறனாளிகளை தாக்கியதைக் கண்டித்து, ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமை சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க மாவட்டத் தலைவா் திருப்பதி தலைமை வகித்தாா். இதில், சிபிஎம் கட்சி நிா்வாகிகள் சபாபதி, நஞ்சுண்டன், மகாலிங்கம் உள்பட மாற்றுத்திறனாளிகள் பலா் பங்கேற்று உரையாற்றினா்.
இதில், சென்னை தலைமைச் செயலகம் முன் நடைபெற்ற கோரிக்கை ஆா்ப்பாட்டத்தின்போது, மாற்றுத்திறனாளிகளை தாக்கியதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.