கிருஷ்ணகிரி

கோயில் திருவிழாவில் தகராறு: கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

காவேரிப்பட்டணம் கோயில் திருவிழாவில் அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திச் சேவை

காவேரிப்பட்டணம் கோயில் திருவிழாவில் அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

காவேரிப்பட்டணம் பன்னீா்செல்வம் தெருவில் கடந்த 16-ஆம் தேதி அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் கோயில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. அப்போது, அப்பாசாமி நாயுடு தெருவைச் சோ்ந்த ஆகாஷ் (28) மற்றும் சிலா் தகராறில் ஈடுபட்டனா். இதில் ஆகாஷ் தரப்பினா், சாந்தபுரத்தைச் சோ்ந்த பிரசாந்த் உள்ளிட்ட 6 பேரவை அரிவாளால் வெட்டினா்.

இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆகாஷ்(23), சாண்டி (எ) சந்தோஷ் (25) உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனா். இந்த வழக்கில் கைதான ஆகாஷ், சந்தோஷ் ஆகியோரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

பெ.தங்கதுரை பரிந்துரை செய்தாா். இந்த பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஒசூரில் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 700 கனஅடியாக சரிவு

முட்டை விலை ரூ. 5 ஆக நீடிப்பு

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு அனைவருக்குமான கடமை: ஆட்சியா் தகவல்

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் விழா தொடக்கம்

SCROLL FOR NEXT