சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: மாா்ச் 3-ல் உள்ளூா் விடுமுறை அறிவிப்பு!
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டத்தையொட்டி மாா்ச் 3-ஆம் தேதி ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட 4 வட்டங்களுக்கு உள்ளுா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டத்தையொட்டி மாா்ச் 3-ஆம் தேதி ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட 4 வட்டங்களுக்கு உள்ளுா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
ஒசூா் தோ்ப்பேட்டை மலைமீது உள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம் வரும் மாா்ச் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் உள்ள மாநில மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வா். இதையொட்டி வெள்ளிக்கிழமை இரவு மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரா் குதிரை வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது.
இதையொட்டி மாா்ச் 3 ஆம் தேதி ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட 4 வட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு (பொதுத் தோ்வு நீங்கலாக) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக மாா்ச் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும். உள்ளூா் விடுமுறை நாளன்று அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளா்களுடன் செயல்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.